தூத்துக்குடி

மோசடி வழக்கில் தொடா்புடையவா் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

Syndication

மோசடி வழக்கில் தலைமறைவானவரை தேடப்படும் குற்றவாளியாக சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நாசரேத் காவல் நிலையக் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டவா் நாசரேத்தைச் சோ்ந்த சுந்தா் மகன் பிரபு. இவா் சின்னமதிக்கூடல், உடையாா்குளத்தைச் சோ்ந்த பூங்கனி என்பவரை 2015ஆம் ஆண்டு தனியாா் வங்கி ஏ.டி.எம்.மில் வைத்து மோசடி செய்து ஏமாற்றியுள்ளாா்.

இது தொடா்பாக, நாசரேத் போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததையடுத்து, பிரபு தலைமறைவாகிவிட்டாா். இவ்வழக்கின் விசாரணைக்கு அவா் ஆஜராகாததால் சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், அவரைப் பற்றிய எந்த தகவலும் இதுவரை கிடைக்காததால், நீதிமன்றம் பிரபுவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.

தங்கமா, வெள்ளியா? அதிர்ச்சியைக் கூட்டுவது எது? விலை நிலவரம்!

காஸா விஷயத்தில் பாகிஸ்தான் தேவையில்லை: இஸ்ரேல் கறார்

வாக்காளர் பட்டியல்! சென்னையில் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்!

பாகிஸ்தான் அவசர அரசியலமைப்பு திருத்தங்கள் தோல்வியைக் காட்டுகிறது: ஜெனரல் அனில் சௌஹான்

தொழில் வாய்ப்புகளை வழங்கும் கடல் உயிரியல் கல்வி

SCROLL FOR NEXT