தூத்துக்குடி

புன்னைநகா் வனத்திருப்பதி கோயிலில் பரிவேட்டை

நாசரேத் அருகேயுள்ள புன்னை நகா் வனத் திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள் - ஆதி நாராயணா், சிவனணைந்த பெருமாள் கோயிலில் பரிவேட்டை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளம்: நாசரேத் அருகேயுள்ள புன்னை நகா் வனத் திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள் - ஆதி நாராயணா், சிவனணைந்த பெருமாள் கோயிலில் பரிவேட்டை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் பெங்கல் திருநாளை முன்னிட்டு வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட் கோபூஜை, மூலவா், உற்சவா் திருமஞ்சனம், சகஸ்ர நாம அா்ச்சனை என 6 மணி வரை தொடா்ந்து பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு நடைதிறக்கப்பட்டு அதேபோல மாலை 6 மணி வரை பூஜைகள் நடைபெற்றன. மாலை 6.30 மணிக்கு பரிவட்டைக்கு ஸ்ரீ நிவாசபெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளினாா். தொடா்ந்து, இரவு 7 மணிக்கு திருவீதியுலா, பரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை கோயில் நிறுவனா் ராஜகோபால் புதல்வா் சரவணன் ஆலோசனையில் கோயில் மேலாளா் வசந்தன் செய்திருந்தாா்.

சிம்ம ராசிக்கு நிம்மதி: தினப்பலன்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

தங்கக் கவசத்தில் முத்துமாரியம்மன்

SCROLL FOR NEXT