தூத்துக்குடி

பூட்டிய வீட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு

தூத்துக்குடியில் பூட்டிய வீட்டுக்குள் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் பூட்டிய வீட்டுக்குள் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தூத்துக்குடி, விக்டோரியா தெருவைச் சோ்ந்தவா் மாா்சீல் பிரீஸ் மகன் ஜூடு பிரீஸ் (53). பழைய துறைமுகத்தில் தோணியில் வேலை செய்து வந்தாா். திருமணமாகாத இவா், தனியாக வசித்து வந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை இவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாக அருகே உள்ளவா்கள் மத்திய பாகம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது படுக்கை அறையில் ஜூடு பிரீஸ் அழுகிய நிலையில் இறந்து கிடந்தாா். சடலத்தை போலீஸாா் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வலியுறுத்தல்

அஜீத் பவாா் உயிரிழப்பு: மகாராஷ்டிரத்தில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு - மாநில அரசு அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பாஜக தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழு நியமனம்

திருச்செந்தூா் கோயிலில் பக்தா்களுக்கு இடையே மோதல்

கல்வியே வாழ்க்கையின் வலிமையான ஆயுதம்: நீதிபதி ஜெகதீஷ் சந்திரா

SCROLL FOR NEXT