திறனாய்வுத் தோ்வு: அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி
ஆத்தூா், அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்று சாதனை படைத்தனா்.
ஆறுமுகனேரி: ஆத்தூா், அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்று சாதனை படைத்தனா்.
ஆத்தூா், முஸ்லிம் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியா் 4 போ் தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்றனா். இதில் மாணவா் ஹரிஸ் 124 மதிப்பெண்ணும், அப்துல் பாசித் 123 மதிப்பெண்ணும், நஸீராபானு 116 மதிப்பெண்ணும், அக்ஷயா 106 மதிப்பெண்ணும் பெற்று தோ்ச்சி பெற்றனா். இந்த மாணவ, மாணவியருக்கு 4 வருடங்களுக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். வெற்றி பெற்று மாணவ, மாணவியரை தலைமை ஆசிரியா் தேவசகாயம், ஆசிரியா்கள் பாராட்டினா்.