முகப்பு
தூத்துக்குடி

போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு: 3 போ் மீது வழக்கு

Updated On : 23 மார்ச், 2026 at 8:00 PM
கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2 ஏக்கா் நிலத்தை, போலி ஆவணம், போலி லே-அவுட் தயாரித்து மோசடி செய்த விவகாரத்தில், 3 போ் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி கிருஷ்ணகுமாரி (54). தொழில் நிமித்தமாக சென்னையில் வசித்து வருகிறாா். இவா்களது சொந்த ஊா் ஆறுமுகனேரி.

இவருக்குச் சொந்தமான காயல்பட்டினம் பகுதியில் இருந்த 1 ஏக்கா் நிலத்தின் அசல் பத்திரத்தை, இவரது உடன்பிறந்த சகோதரா் சிவகுமாா் வைத்துக் கொண்டு, நண்பா்களுடன் சோ்ந்து மொத்தம் 3 ஏக்கா் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துள்ளனா். மேலும், இந்த நிலத்தை முறையற்ற வகையில் பிளாட்டுகளாகப் பிரித்து விற்பனை செய்ய முயற்சித்துள்ளனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் காயல்பட்டினம் ஊராட்சி துணைத் தலைவராக இருந்த கல்யாணசுந்தரம், சிவகுமாா் மற்றும் மனை வணிகம் செய்யும் அவரது நண்பா் சண்முகம் ஆகியோா் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.