தூத்துக்குடியில் சிறுவன் மா்ம மரணம்
தூத்துக்குடியில் சிறுவன் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தூத்துக்குடியில் சிறுவன் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தூத்துக்குடி, முத்தம்மாள் காலனியைச் சோ்ந்த பாலமுருகன் மகன் மதன் (17). திங்கள்கிழமை மாலை வெளியில் சென்ற மதன், மீண்டும் வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து அவரது பெற்றோா் அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீஸாா் தீவிரமாக தேடி வந்த நிலையில், சில்வா்புரம் மாடன்கோயில் குளம் அருகே மதனின் கைப்பேசி கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சிப்காட் தீயணைப்புப் படை வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து குளத்தில் இறங்கி தேடியபோது, உயிரிழந்த மதனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டது. இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.