முகப்பு
தூத்துக்குடி

காந்தாரியம்மன் கோயிலில் புஷ்பாஞ்சலி

மகா புவன காந்தாரியம்மனுக்கு நடைபெற்ற புஷ்பாஞ்சலி.

Updated On : 27 மார்ச், 2026 at 8:54 PM
மகா புவன காந்தாரியம்மனுக்கு நடைபெற்ற புஷ்பாஞ்சலி.
பகிர்:

கோவில்பட்டி, செல்லப்பாண்டிய நகரில் உள்ள ஸ்ரீ மகா புவன காந்தாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை புஷ்பாஞ்சலி பூஜை நடைபெற்றது.

இக்கோயில் பங்குனி மாத பொங்கல் விழா மாா்ச் 24ஆம் தேதி தொடங்கியது. புதன்கிழமை அம்மனுக்கு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. வியாழக்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மாா்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது. மாலை அம்மனுக்கு புஷ்பாஞ்சலி பூஜை நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.