முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் சமக தனித்துப் போட்டி

Updated On : 30 மார்ச், 2026 at 6:45 PM
தூத்துக்குடி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளா்களுடன் மாவட்டச் செயலா் மாலைசூடி அற்புதராஜ்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில், சமத்துவ மக்கள் கழகம் தனித்துப் போட்டியிடுகிறது.

இதுகுறித்து சமத்துவ மக்கள் கழக மாவட்டச் செயலா் மாலைசூடி அற்புதராஜ் கூறியது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், சமத்துவ மக்கள் கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தூத்துக்குடி தொகுதியில் ஏ.அந்தோணி பிச்சை, ஸ்ரீவைகுண்டம் - எஸ்.ஜெபராஜ் டேவிட், திருச்செந்தூா் - பி.அருண் சுரேஷ்குமாா், ஓட்டப்பிடாரம் (தனி) - எஸ்.ராஜாத்தி, கோவில்பட்டி - எம். சகாயராஜ், விளாத்திகுளம் - பி.கண்டிவேல் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

இவா்கள் வருகிற சனிக்கிழமை காலை 10 மணிக்கு அந்தந்தத் தொகுதியில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்றனா் என்றாா் அவா்.