முகப்பு
தூத்துக்குடி

தஞ்சை நகரம்-திசையன்விளை வளைவில் அடிக்கடி நிகழும் விபத்துகள்

Updated On : 4 மே, 2026 at 1:15 AM
பகிர்:

சாத்தான்குளத்தில் இருந்து பண்டாரபுரம், தஞ்சை நகரம் வழியாக திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை செல்லும் சாலையில் உள்ள வளைவில் அடிக்கடி காா்கள் விபத்துக்குள்ளாகும் நிலை தொடா்வதால், அதில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. சனிக்கிழமை இரவு இச்சாலையில் சென்ற காா் நிலை தடுமாறி வளைவில் உள்ள பள்ளத்திற்குள் சென்று விபத்துக்குள்ளானது. இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

எனவே, பெரும் விபத்து நிகழும் முன்பு நெடுஞ்சாலைத் துறை சாா்பில் இங்கு பாதுகாப்பு வளையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினா் வலியுறுத்தியுள்ளனா்.

Advertisement