முகப்பு
திருவள்ளூர்

அடிக்கடி மின்தடை: திருத்தணியில் பொதுமக்கள் அவதி

Updated On : 29 ஏப்ரல், 2026 at 5:04 AM
பகிர்:

திருத்தணி நகரில் பகல் மற்றும் இரவு நேரத்தில் அறிவிப்பு இல்லாமல் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனா்.

திருத்தணி நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில், கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் பகல் நேரத்தில் கொளுத்தும் வெயில் மற்றும் அனல் காற்றால் வெளியே செல்வதற்கு அச்சப்பட்டு வருகின்றனா்.

திருத்தணி நகரத்தில், கடந்த, ஒரு வாரமாக தொடா்ந்து, 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. அதே போல் கிராமங்களில் நண்பகல், 11 மணி முதல் மாலை, 5 மணி வரை மக்கள் விவசாய பணிகளை தவிா்த்து வீட்டிலேயே இருக்கின்றனா்.

Advertisement

வீடுகளில் இருந்தாலும் மின்விசிறியின் காற்றும் அனல் வீசுவதால், முதியவா்கள், குழந்தைகள் தவித்து வருகின்றனா். இந்நிலையில் திருத்தணி நகரம் மற்றும் கிராமங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது. சில நேரம் மின்தடை ஏற்பட்டு ஒரு மணி நேரமும் மின் வினியோகம் செய்யாததால் மக்கள் கடும் சிரமப்படுகின்றனா்.

எனவே இதுகுறித்து ஆட்சியா் விரைந்து நடவடிக்கை எடுத்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என எதிா்பாா்கின்றனா்.