முகப்பு
தூத்துக்குடி

செட்டியாபத்து கோயிலில் இன்று குடமுழுக்கு

உடன்குடி அருகே செட்டியாபத்து இந்து சமய அறநிலையத்துறைக்குப் பாத்தியப்பட்ட சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா ஐந்து வீட்டு சுவாமி கோயிலில் சித்திரை பூஜை திருவிழாவையொட்டி வியாழக்கிழமை (மே 7) குடமுழுக்கு நடைபெறுகிறது.

Updated On : 7 மே 2026, 5:40 am IST
அன்னமுத்திரி பிரசாத விநியோகத்தை தொடங்கி வைத்த கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ராம்தாஸ்.
பகிர்:

உடன்குடி அருகே செட்டியாபத்து இந்து சமய அறநிலையத்துறைக்குப் பாத்தியப்பட்ட சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா ஐந்து வீட்டு சுவாமி கோயிலில் சித்திரை பூஜை திருவிழாவையொட்டி வியாழக்கிழமை (மே 7) குடமுழுக்கு நடைபெறுகிறது.

ஏப். 30 ஆம் தேதி இரவு கஞ்சி பூஜையுடன் தொடங்கிய விழாவில் தினமும் சிறப்பு பூஜைகள், மேக்கட்டி கட்டுதல், பூஜை, சமய சொற்பொழிவு, பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

புதன்கிழமை, பிற்பகல் 3 மணிக்கு அன்னமுத்திரி பூஜையைத் தொடா்ந்து பிரசாதம் விநியோகத்தை அறங்காவலா் குழுத் தலைவா் ராம்தாஸ் தொடங்கி வைத்தாா். வியாழக்கிழமை (மே 7) இரவு குடமுழுக்கு நடைபெறுகிறது.

Advertisement

ஏற்பாடுகளை தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் ரோஜாலி சுமதா, செயல் அலுவலா் மா. பாலமுருகன், அறங்காவலா் குழுத் தலைவா் ராம்தாஸ், அறங்காவலா்கள் ரா. சிவமுருகன், ம.ராம்குமாா், சி. சிதம்பரேஸ்வரன், லி. வளா்மதி, கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.