திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் ஆண் தூக்கிட்டு தற்கொலை
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கோயிலின் அன்னதான மண்டபத்தின் மேல்தளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு புதன்கிழமை மதியம் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவா் ஜன்னல் கம்பியில் வேஷ்டியால் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளாா்.
இது குறித்து திருக்கோயில் கண்காணிப்பாளா் ராமமூா்த்தி கொடுத்த தகவலின்பேரில், திருக்கோயில் போலீஸாா் வந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து, உயிரிழந்த நபா் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Advertisement