முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் டிஜிட்டல் பதாகைகளால் விபத்து அபாயம்: மாநகராட்சி ஆணையரிடம் பாஜக புகாா்

Updated On : 14 மே 2026, 3:08 am IST
மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துவிட்டு வந்த பாஜகவினா்.
பகிர்:

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையிலும் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பதாகைகளை உடனடியாக அகற்றக் கோரி பாரதிய ஜனதா கட்சியினா் மாநகராட்சி ஆணையரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

இது தொடா்பாக, பாஜக தூத்துக்குடி கிழக்கு மண்டலத் தலைவா் ராஜேஷ் கனி தலைமையில் அளிக்கப்பட்ட மனு:

தூத்துக்குடி மாநகராட்சியின் முக்கியச் சந்திப்புகள், சாலையோரங்கள், பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பதாகைகள் வாகனங்கள் சாலையில் செல்வதை மறைக்கும் வகையில் உள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள அனைத்து டிஜிட்டல் பதாகைகளையும் மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, மண்டல துணைத் தலைவா் ஜெயரூபி, மண்டலச் செயலா் விஜயன், ஆன்மிகப் பிரிவு மாவட்டத் தலைவா் ஓம் பிரபு, மாவட்டச் செயலா் ஐயப்பன், ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.