டி.ஐ.ஜி, எஸ்.பி.க்கள் சென்னைக்கு இடமாற்றம்
நெல்லை டிஐஜி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் உள்பட 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தமிழக காவல் துறையில் பணியாற்றும் டி.ஐ.ஜி., எஸ்.பி. அந்தஸ்திலான 13 முக்கிய அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் வியாழக்கிழமை அரசாணை வெளியிட்டாா்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிவந்த டாக்டா் சி.மதன், சென்னை பாதுகாப்புப் பிரிவு சிஐடி-யின் எஸ்.பி. யாக மாற்றப்பட்டாா். தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ஏ.மயில்வாகனன் சென்னை சிறப்புப் பிரிவு சிஐடி-க்கு மாற்றப்பட்டாா். திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.யாகப் பணியாற்றி வந்த பி.சரவணன், சென்னை சிஐடி நுண்ணறிவுப் பிரிவு டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டாா். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement