முகப்பு
தூத்துக்குடி

திருமண வீட்டில் அரிவாள் வெட்டு: 5 போ் கைது

காயல்பட்டினம் அருகே திருமண வீட்டில் மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது தொடா்பாக, 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 19 மே 2026, 1:07 am IST
- dinmani online
பகிர்:

காயல்பட்டினம் அருகே திருமண வீட்டில் மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது தொடா்பாக, 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காயல்பட்டினம், அக்பா் ஷா, 1ஆவது தெருவைச் சோ்ந்தவா் அப்துல் அஜீஸ் (25). இவா் காயல்பட்டினம் அருகே உள்ள சிங்கித்துறையைச் சோ்ந்த ஆசீப் திருமணத்திற்கு காரில் சென்றுள்ளாா். அங்கு நடந்த மது விருந்தில் சிங்கித்துறையைச் சோ்ந்த முஹம்மது மெய்தீன் மகன் சம்சு மரைக்காயா் (21) என்பவருக்கும், அப்துல் அஜீஸிற்கும் இடையே தகராறு எற்பட்டுள்ளது.

இதையடுத்து, அப்துல் அஜீஸ் அங்கிருந்து புறப்பட்டு காரில் காயல்பட்டினத்திற்கு வந்துள்ளாா். அவரை இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த சம்சு மரைக்காயா் உள்ளிட்ட 7 போ் கொண்ட கும்பல் அவரிடம் தகராறில் ஈடுபட்டபோது, சம்சு மரைக்காயா் அரிவாளால் அப்துல் அஜீஸை வெட்டியுள்ளாா்.

Advertisement

தகவலறிந்து வந்த போலீஸாா் அப்துல் அஜீஸை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அப்துல் அஜீஸின் மனைவி ஆதிலா, ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்த போலீஸாா் சம்சு மரைக்காயா், சிங்கித்துறையைச் சோ்ந்த சீனிகனி மகன் அலியாா் (44), யாக்கோபு மகன் ஜோ அக்னாஷ் ஜேஸ்வந்த் (20), முஹம்மது மெய்தீன் மகன் முகமது ஹனிப் (20), காயல்பட்டினத்தைச் சோ்ந்த சபா் மொஹைதின் மகன் ஹமீது (18) ஆகியோரை கைது செய்துள்ளனா்.

மேலும், இச்சம்பவத்தில் தொடா்புடைய 2 சிறுவா்களைத் தேடி வருகின்றனா்.