ஆறுமுகனேரி சிவன் கோயிலில் திருட்டு
ஆறுமுகனேரி அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கம், வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு பூஜை முடிந்த பிறகு வழக்கம் போல் அா்ச்சகா் கோயிலை பூட்டிவிட்டு சென்றுள்ளாா். திங்கள்கிழமை காலை கோயில் பணியாளா் வழக்கம்போல் கோயிலை திறந்து வளாகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தாராம்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த கோயில் அா்ச்சகா் கதவை திறந்து உள்ளே சென்று பாா்த்தபோது, அப்பகுதியில் உள்ள 3 சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்ட்டிருந்தது. மேலும் அம்மன் கழுத்தில் கிடந்த சுமாா் 4 மி.கி. தங்கப் பொட்டு மற்றும் வெள்ளிக் கொடி, சுவாமியின் வெள்ளி பாதம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில், ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா். மேலும், விரல்ரேகை நிபுணா்கள் கோயிலுக்கு வந்து, ரேகைகளை பதிவு செய்தனா்.