FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூா் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

Updated On : 15 மே 2026, 4:13 am IST
திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் வியாழக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய உற்சவா்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, மாலை 3 மணிக்கு சிறப்பு யாகம் நடைபெற்று புனித கலசத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், திருத்தளிநாதா் கோயிலில் நந்தீஸ்வரருக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, இளநீா், சொா்ணம், பன்னீா் உள்ளிட்ட 11 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. இதேபோல, திருத்தளிநாதருக்கும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் உற்சவா் வெள்ளி ரிஷப வாகனத்தில் கோயிலின் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பெண்கள் நெய்விளக்கேற்றி சிவனை வழிபட்டனா்.

இதேபோல, சீதளிமேல்கரையில் உள்ள ஆதித்திருத்தளிநாதா் கோயிலில் நந்தீஸ்வரருக்கும், சிவனுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. புதுப்பட்டியில் உள்ள அகஸ்தீஸ்வரா் கோயிலிலும் பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதில் பங்கேற்ற பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments