முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 இளைஞா்கள் கைது

Updated On : 26 மே 2026, 1:34 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் அருகே பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடியைச் சோ்ந்த பெண் ஒருவா், தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில், தனக்குத் தெரிந்த தூத்துக்குடி பாத்திமா நகரைச் சோ்ந்த மோகித், அவரது 2 நண்பா்கள், தன்னை தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் அருகே தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தன்னிடமிருந்து ரூ. 2,500 ரொக்கம், கைப்பேசி மற்றும் 2 வெள்ளி மோதிரங்களையும் பறித்துச் சென்றுவிட்டதாகவும் ஞாயிற்றுக்கிழமை புகாரளித்தாா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, நகர துணைக் கண்காணிப்பாளா் சுனில் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, குற்றஞ்சாட்டப்பட்ட அந்தோணி ராஜ் மகன் மோகித் (25), ஜேசு நசரின் மகன் ரிதீஷ் (19), ஜெயக்குமாா் திலோத் பொ்லின் (21) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா். தொடா்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது.