முகப்பு
திருச்சி

கதர், கிராமப் பொருள்கள் கண்காட்சி தொடக்கம்

திருச்சி, ஜன. 8: திருச்சியில் கதர், கிராமப் பொருள்கள் கண்காட்சியைப் மாவட்ட ஆட்சியர் மகேசன்காசிராஜன் சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.   தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில், தில்லைநகர் மக்கள் மன்

திருச்சி

கதர், கிராமப் பொருள்கள் கண்காட்சி தொடக்கம்

திருச்சி, ஜன. 8: திருச்சியில் கதர், கிராமப் பொருள்கள் கண்காட்சியைப் மாவட்ட ஆட்சியர் மகேசன்காசிராஜன் சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.   தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில், தில்லைநகர் மக்கள் மன்

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

திருச்சி, ஜன. 8: திருச்சியில் கதர், கிராமப் பொருள்கள் கண்காட்சியைப் மாவட்ட ஆட்சியர் மகேசன்காசிராஜன் சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.

  தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில், தில்லைநகர் மக்கள் மன்றத்தில் இந்தக் கண்காட்சி ஜன. 14 வரை நடைபெறுகிறது. இதில், திருச்சி சர்வோதய சங்கங்கள் சார்பில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

   கதர், பட்டு, பாலியஸ்டர் துணி ரகங்கள், ஆயத்த ஆடைகள், போர்வைகள், துண்டு ரகங்கள், மெத்தை, தலையணைகள் ஆகியவற்றுக்கு 20 முதல் 30 சதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. சில குறிப்பிட்ட ரகங்களுக்கு 40 முதல் 70 சதம் வரையும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

  இங்கு சோப்புகள், தேன், சாம்பிராணி, ஜவ்வாது, பத்திகள், சந்தன மாலைகள், காலணிகள், "டெட்ராபேக்'கில் பதப்படுத்தப்பட்ட பதநீர், பனங் கல்கண்டு, பனஞ்சீனி, பனை வெல்லம் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் விற்கப்படுகின்றன.    கண்காட்சித் தொடக்க நிகழ்ச்சியில், கதர் கிராமத் தொழில்கள் மண்டலத் துணை இயக்குநர் எஸ். சம்பத்குமார், உதவி இயக்குநர் சா. ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →