மின்தடை நேரத்தை மாற்றக் கோரிக்கை
பட்டுக்கோட்டை, ஜன. 8: பட்டுக்கோட்டை வட்ட ஓய்வூதியர்கள் சங்கக் கூட்டத்தில் மின்தடை நேரத்தை மாற்றக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவர் சிவ. சுப்பிரமணியம் தலைமை வகித்த
பட்டுக்கோட்டை, ஜன. 8: பட்டுக்கோட்டை வட்ட ஓய்வூதியர்கள் சங்கக் கூட்டத்தில் மின்தடை நேரத்தை மாற்றக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவர் சிவ. சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
தற்போது பனிக் காலமாக உள்ளதால் காலை 8 மணி வரை போதிய வெளிச்சம் இருப்பதில்லை. இந்நிலையில், பட்டுக்கோட்டை நகரில் காலை 6 மணி முதல் 8 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதால், 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள் போதிய வெளிச்சமின்றி படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே, தேர்வுகள் முடியும் வரை காலை மணி 6 -8 அமல்படுத்தப்படும் மின் தடையை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.