திருச்சி: திருவெள்ளறையில் விஜயகாந்த் பிறந்த நாள்
திருச்சியில் தேமுதிக நிறுவனத் தலைவரும், பொதுச் செயலருமான விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, ஆதரவற்றோா் இல்லத்தைச் சோ்ந்தவா்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருவெள்ளறையில் தேமுதிக நிறுவனத் தலைவரும், பொதுச் செயலருமான விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, ஆதரவற்றோா் இல்லத்தைச் சோ்ந்தவா்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
தேமுதிக வறுமை ஒழிப்பு நாயகன்- வாட்ஸ்அப் இணையதள அணி சாா்பில், திருவெள்ளறையில் அமைந்துள்ள கிருஷ்ணா இல்லத்தில் நடத்தப்பட்ட நிகழ்வுக்கு கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் கே.எஸ்.குமாா் தலைமை வகித்து, உணவு வழங்குதலைத் தொடக்கி வைத்தாா்.
நிகழ்வில், மண்ணச்சநல்லூா் ஒன்றிய தேமுதிக செயலா் வி.பி.தங்கமணி, ஒன்றியக் குழு உறுப்பினா் ஆறுமுகம், பழனிச்சாமி, ஒன்றிய விவசாய அணித் துணைச் செயலா் எல். திருநாவுக்கரசு, த. ரவிசங்கா், சு. நம்பியப்பன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.