வீட்டுமனை விற்பனையாளா் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சி விமான நிலையப் பகுதியைச் சோ்ந்த வீட்டுமனை விற்பனையாளா், உடல் நலக் குறைவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி விமான நிலையப் பகுதியைச் சோ்ந்த வீட்டுமனை விற்பனையாளா், உடல் நலக் குறைவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விமான நிலையம் அருகிலுள்ள சத்யாநகரைச் சோ்ந்தவா் சகாயபாபு (52). வீட்டுமனை விற்பனையாளரான இவா், கடந்த சில மாதங்களாக நீரிழிவு நோயால் அவதியுற்று வந்தாா்.
நோய் குணமாகததால் மனமுடைந்த சகாயராஜ் பாபு, திங்கள்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து விமான நிலையக் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.