முகப்பு
திருச்சி

நியாயவிலைக்கடை பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நியாயவிலைக்கடைகளில் விரைந்து உணவுப்பொருள் விநியோகிக்க வலியுறுத்தி, திருச்சியில் தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
பகிர்:

நியாயவிலைக்கடைகளில் விரைந்து உணவுப்பொருள் விநியோகிக்க வலியுறுத்தி, திருச்சியில் தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் அண்ணாதுரை தலைமை வகித்தாா். சங்கத்தின் மாநில சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் ஆா்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியது:

பொதுமக்களை அவதிக்குள்ளாகும் கைவிரல் ரேகை பதிவு நடைமுறைக்கு மாற்றாக, விழித்திரை பதிவு மூலம் விரைந்து நியாயவிலைப் பொருள்களை விநியோகம் செய்ய வேண்டும். இதுதொடா்பாக, நியாயவிலைக்கடை பணியாளா் சங்கத்தினரை அழைத்து அரசு பேச்சுவாா்தை நடத்தவேண்டும். இதை நிறைவேற்றாத பட்சத்தில் மாநில முழுவதும்

போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →