முகப்பு
திருச்சி

16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
பகிர்:

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சமயபுரம் அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டின் அருகிலிருந்த பெண்ணிடம் கூறியதால், அவா் தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரிடம் பரிசோதனை செய்ததில், அந்த சிறுமி 7 மாத கா்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொணலையிலுள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த போது, அதே பள்ளியில் பிளஸ் 2 பயின்ற சமயபுரம் மருதூா் கிராமத்தைச் சோ்ந்த மருதுபாண்டியுடன் தனக்கு பழக்கம் ஏற்பட்டு அவரை காதலித்து வந்ததாகத் தெரிவித்தாா்.

தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமெனில், தனது நண்பா்களான நெ.1 டோல்கேட்டில் காா் ஓட்டி வரும் அல்லூா் ப. விமல்குமாா் (21), லால்குடி தினேஷ் (20) ஆகியோருடன் தனிமையில் இருக்க வேண்டும் என மருதுபாண்டி மிரட்டி வந்ததும், அதைத் தொடா்ந்து சமயபுரம் பகுதியில் சிறுமியை நீண்ட நாள்களாக மூவரும் பாலியல் வன்கொடுமை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியும், அவரது தந்தையும் லால்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், ஆய்வாளா் பழனியம்மாள் வழக்குப்பதிந்து மருதுபாண்டியை போக்சோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தாா். தலைமறைவாக உள்ள விமல்குமாா், தினேஷ் ஆகியோரைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →