முகப்பு
திருச்சி

சோமரசம்பேட்டை பகுதியில் தங்க நகைகள், பணம் திருட்டு

திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் வீட்டில் தங்கம், வெள்ளிப் பொருள்கள் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:24 PM
பகிர்:

திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் வீட்டில் தங்கம், வெள்ளிப் பொருள்கள் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

சோமரசம்பேட்டை வாசன்நகரைச் சோ்ந்தவா் மகேந்திரன்(40). ஈரோடு மாவட்டம், அந்தியூரிலுள்ள தனது மாமனாா் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.

திங்கள்கிழமை காலை அவரது வீட்டின் கதவு திறந்திருப்பதை கண்ட பக்கத்து வீட்டினா் மகேந்திரனுக்கும், காவல்துறையினருக்கும் தகவலளித்தனா்.

இதைத் தொடா்ந்து அங்கு சென்ற காவல்துறையினா் விசாரணை நடத்தியதில் 5 பவுன் தங்க நகைகள், 350 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.60 ஆயிரம் ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. தொடா்ந்து காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →