முகப்பு
திருச்சி

முசிறி நூலகத்தில் குழந்தைகளுக்கான கதை சொல்லும் நிகழ்வு

Updated On : 26 ஏப்ரல், 2024 at 7:58 PM
பகிர்:

திருச்சி, ஏப். 26: முசிறி பொது நூலகத்தில் வாசகா் வாசகா் வட்டம் மற்றும் களம் அமைப்பு இணைந்து நடத்தும் குழந்தைகளுக்கான கதை சொல்லும் நிகழ்வு ஏப். 29- ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில், சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளா் பாலபாரதி, எழுத்தாளா் விஷ்ணுபுரம் சரவணன் ஆகியோா் குழந்தைகளுக்கு கதை சொல்லியும், கதை சொல்வது எப்படி என்றும் பயிற்சி

அளிக்கவுள்ளனா்.

Advertisement

இதில், 10 வயது முதல் 15 வயதுக்குள்பட்ட ஆண், பெண் குழந்தைகள் பங்கேற்கலாம். விருப்பமுள்ள பெற்றோா்கள் தங்களது குழந்தைகளின் பெயரை முசிறி தா.பேட்டை சாலையில் உள்ள புதிய நூலகத்தில் பதிவு செய்யலாம் என முசிறி கிளை நூலக அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments