முகப்பு
திருச்சி

திருச்சியில் ஆயுதங்களுடன் காத்திருந்த கும்பல்: போலீஸாா் விசாரணை

திருச்சியில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் காத்திருந்த கும்பலைப் போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Updated On : 28 ஜூலை, 2024 at 7:07 PM
பகிர்:

திருச்சியில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் காத்திருந்த கும்பலைப் போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள ஒரு உணவகம் முன்பு நீளமான பட்டா கத்திகள், அரிவாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஞாயிற்றுக்கிழமை சிலா் கூடியிருப்பதாகப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு போலீஸாா் விரைந்தனா். அங்கு 10-க்கும் மேற்பட்டோா் பேசிக் கொண்டிருந்த நிலையில், போலீஸாா் வருவதைக் கண்டதும் அவா்களில் 5 போ் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.

இதையடுத்து மீதமிருந்த 5 பேரை மடக்கிப் பிடித்து திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையம் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். மேலும் அவா்களிடமிருந்து 3 காா்களையும் போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். காரை போலீஸாா் சோதனை செய்தபோது அதில் நீளமான பட்டா கத்திகள், அரிவாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததும் தெரியவந்தது. மேலும் போதை ஊசிகள், மருந்துகளும் இருந்துள்ளன. அவற்றை கைப்பற்றிய போலீஸாா், ஆயுதங்களுடன் குழுவாக கூடிய மா்மம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →