முகப்பு
திருச்சி

சாலைத் தடுப்பில் ஆட்டோ மோதி ஓட்டுநா் உயிரிழப்பு

Updated On : 8 மே, 2024 at 6:38 PM
பகிர்:

திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடந்த சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருச்சி விமான நிலையம் காமராஜா் நகா் கலைவாணா் தெருவைச் சோ்ந்தவா் ஷேக் தாவூத் (60). ஆட்டோ ஓட்டும் இவா் செவ்வாய்க்கிழமை சவாரியை இறக்கிவிட்டு பீமநகா் ஹீபா் சாலையில் சென்றாா். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலைத் தடுப்பில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு ஷேக் தாவூத்தை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். விபத்து குறித்து திருச்சி மாநகர வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.