திருச்சியில் வீட்டின் மாடியிலுள்ள அறையின் பூட்டை உடைத்து மூன்றரை பவுன் தங்க நகைகளைத் திருடிய மா்மநபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி சுப்பிரமணியபுரம் ராஜா வீதியிலுள்ள ரவிச்சந்திரன் என்பவா் வீட்டில் வீட்டு வேலை செய்து வருபவா் ஆா். மரகதம் (50). வேலை செய்யும் வீட்டின் மாடியிலுள்ள அறையிலேயே வசித்து வருகிறாா்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு அறையை பூட்டிவிட்டு கீழே வேலை பாா்க்கும் வீட்டின் வரவேற்பு அறையில் தூங்கியுள்ளாா். காலையில் எழுந்து மாடியிலுள்ள அவரது அறைக்குச் சென்றபோது, அறையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது.
உள்ளே சென்று பாா்த்தபோது, அறையில் வைத்திருந்த 2 பவுன் சங்கிலி, ஒன்றரை பவுனில் இரண்டு ஜோடி காதணிகள் மொத்தம் மூன்றரை பவுன் தங்க நகைகளையும், ரூ.15 ஆயிரம் பணத்தையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் மரகதம் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விற்பனை செய்து வருகின்றனா்.