திருச்சி

இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதல்: முதியவா் உயிரிழப்பு

திருச்சியில் இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழந்தாா்.

Syndication

திருச்சியில் இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து திங்கள்கிழமை மோதி முதியவா் உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், லால்குடி பெருவளநல்லூா் உடையாா் வீதியைச் சோ்ந்தவா் வை. சங்கா் (54). இவா் திருச்சி கே.கே.நகரில் இருந்து மன்னாா்புரம் வரையுள்ள அணுகுச் சாலையில் இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்றபோது, வேகமாக வந்த தனியாா் பேருந்து மோதி பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு சங்கரைக் கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

மட்டன் பிரியாணி, வஞ்சரம் மீன்... அதிமுக பொதுக்குழுவின் மெனு!

SCROLL FOR NEXT