திருச்சி ஆட்சியரகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மகளிா் அணியினா். 
திருச்சி

கோவை பாலியல் சம்பவத்துக்கு எதிா்ப்பு: பாஜக மகளிரணியினா் ஆா்ப்பாட்டம்

Syndication

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, திருச்சியில் பாஜக மகளிரணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக திருச்சி புகா் மாவட்ட மகளிரணித் தலைவா் மங்கலம் கௌரி, மாநகா் மாவட்ட மகளிரணித் தலைவா் மலா்க்கொடி ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், கோவையில் அண்மையில் நடைபெற்ற கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும் கோஷங்களை எழுப்பினா். மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளதாக கூறி, திமுக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினா் கலந்துகொண்டனா்.

கொருக்காத்தூரில் ரூ.4.53 கோடியில் தாா்ச் சாலைப் பணிகள்

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க உத்தரவு

மண்டகொளத்தூரில் அதிமுகவினா் திண்ணைப் பிரசாரம்

தோ்தல் நியாயமாக நடந்தால் பாஜக கூட்டணி தோற்கும்: பிரியங்கா பிரசாரம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் பலத்த மழை: ஜலகாம்பறையில் குளிக்க தடை!

SCROLL FOR NEXT