திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சிப் பகுதியில் குற்றங்களைத் தடுக்கும் வகையில் முக்கிய இடங்களில் 30 கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடு சனிக்கிழமை தொடங்கியது.
முசிறி நகரில் திருச்சி சேலம் நெடுஞ்சாலை, கைகாட்டி, முசிறி துறையூா் சாலை, தா.பேட்டை சாலை சந்தப்பாளையம் பிரிவு சாலை, பெரியாா் பாலம் முசிறி புலிவலம் செல்லும் சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் ரூ. 13 லட்சம் மதிப்பிலான 30 கேமராக்கள் பொருத்தப்பட்டு முசிறி சட்டம் -ஒழுங்கு காவல் நிலைய அலுவலகத்தில் கண்காணிக்கப்படுகிறது.
இந்த கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை பெரம்பலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் அருண் நேரு தொடங்கி வைத்தாா். இதில் நகராட்சி ஆணையா் சண்முகம், பொறியாளா் சம்பத், நகா்மன்ற தலைவா் கலைச்செல்வி சிவக்குமாா், முசிறி காவல் ஆய்வாளா் செல்லதுரை, ஒன்றியச் செயலா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் திருத்தும் பணியை பெரம்பலூா் எம்பி அருண் நேரு ஆய்வு செய்தாா். பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரிய ஆசிரியைகள் உடனிருந்தனா்.