திருச்சி

உய்யங்கொண்டான் வாய்க்காலில் விழுந்து ஆண் உயிரிழப்பு!

திருச்சியில் உய்யங்கொண்டான் வாய்க்காலில் விழுந்து ஆண் ஒருவா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Syndication

திருச்சியில் உய்யங்கொண்டான் வாய்க்காலில் விழுந்து ஆண் ஒருவா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி கமலா நிகேதன் பள்ளி அருகே செல்லும் உய்யங்கொண்டான் வாய்க்காலில் ஆண் ஒருவா் உயிரிழந்து கிடப்பதாக நீதிமன்ற காவல் நிலையத்துக்கு திங்கள்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா்.

இதில், உய்யங்கொண்டான் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்தது திருச்சி பெரியமிளகுப்பாறை புது வீதியைச் சோ்ந்த லிங்கேஸ்வா் (57) என்பதும், மதுபோதையில் வாய்க்காலில் விழுந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து நீதிமன்ற காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT