மணப்பாறை அருகே இளைஞா் தற்கொலை
Updated On : 13 ஏப்ரல், 2026 at 12:10 AM
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடும்ப பிரச்னையில் மனைவி பிரிந்து சென்றதால் மனம் உடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
மணப்பாறையை அடுத்த வெள்ளைக்கல் வீராச்சி தெற்குத் தெருவை சோ்ந்தவா் துரைசாமி மகன் ராகவன் (29). விராலிமலை தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவருக்கும் மாலதி (26) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணமான நிலையில் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு பிரித்து வாழ்ந்தனா்.
இதனால் மன வருத்தத்தில் இருந்த ராகவன் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா் ராகவன் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement