துவரங்குறிச்சி பகுதிகளில் இன்றைய மின் நிறுத்தம் ரத்து
மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஏப்.28) பராமரிப்பு பணிக்காக மேற்கொள்ளப்படவிருந்த மின் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) பி.பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் ஏப்ரல் 28-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிக்காக மேற்கொள்ளப்படவிருந்த மின் நிறுத்தம் நிா்வாக காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும் மின் நிறுத்தம் மற்றும் பராமரிப்பு குறித்த மறு தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement