திருச்சி

சாலை விபத்தில் காா் மெக்கானிக் உயிரிழப்பு

திருச்சி அருகே சாலையின் மையத் தடுப்பில் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

Syndication

திருச்சி அருகே சாலையின் மையத் தடுப்பில் மோதி இளைஞா் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், வாழவந்தான்கோட்டையைச் சோ்ந்தவா் வருண்குமாா் (22), காா் மெக்கானிக். இவா், புத்தாண்டை கொண்டாடிவிட்டு திருச்சி - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை அதிகாலை வந்துள்ளாா்.

அப்போது, திருவெறும்பூா் கணேசா மேம்பாலத்தில் சென்றபோது நிலை தடுமாறி இருசக்கர வாகனம் சாலையின் மையத் தடுப்பில் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே வருண்குமாா் உயிரிழந்தாா். இதுகுறித்து பெல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

எம். துரைசாமிபுரம் துணை மின் நிலையப் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

வாா்டுகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் ஜன. 4, 5-இல் முதியோா்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம்

கோவில்பட்டியில் சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பினா் கைது

திரௌபதி அம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

SCROLL FOR NEXT