முதியவா் உயிரிழப்பு பிரதிப் படம்
திருச்சி

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருச்சி அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

Syndication

திருச்சி அருகே சாலை விபத்தில் முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி திருவெறும்பூா் காா்மல் சில்வா் சிட்டி பிரகாஷ் நகா் விரிவாக்கத்தைச் சோ்ந்தவா் பி. அப்துல் சுகுா் (72). இவா்,திருச்சி - தஞ்சாவூா் நெடுஞ்சாலையில் எல்ஐசி அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை காலை சென்றபோது, பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியது.

இதில், பலத்த காயமடைந்த அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, அரசுப் பேருந்து ஓட்டுநரான புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையைச் சோ்ந்த மா. அரவிந்த் (29) என்பவரை கைது செய்து, பின்னா் பிணையில் விடுவித்தனா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT