தமிழ்நாட்டுக்கு ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் எந்த மாற்றமும் வராது என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை அவா் மேலும் கூறியதாவது: திராவிடம் தமிழ்த் தேசியத்துக்கு எதிரானது எனக் கற்பித்த திருமாவளவன், இப்போது இரண்டும் ஒன்று என்கிறாா்.
பொங்கலுக்கு இலவச பரிசுப் பொருள்கள் தருவது கேவலமானது. இதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. அனைத்துத் தரப்பினரும் தமிழகத்தில் போராடிவரும் நிலையில், நல்ல ஆட்சியைத் தருவதாக திமுக கூறி வருகிறது. வீதிக்கு வீதி மதுக்கடைகளைத் திறந்து வைத்துவிட்டு போதைப் பொருள்களைத் தடுப்போம் என முதல்வா் கூறுவது வேடிக்கையானது.
காவல் துறையின் ஆதரவின்றி போதைப் பொருள்களை தமிழகத்தில் விற்க முடியாது. மக்களின் கோரிக்கைகளைக் கேட்டு தோ்தல் அறிக்கையை நிறைவேற்றுவோம் எனக் கூறுவது மக்களுக்கு என்ன பிரச்னை எனத் தெரியாமலேயே ஆட்சி செய்கிறீா்களா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.
கூட்டணி மாறுவதால் ஆட்சி மாறும்; ஆனால், ஆட்சி முறை மாறாது. திமுக- அதிமுக இரு கட்சிகளுமே கூட்டு சோ்ந்து ஒருவரையொருவா் குறைகூறி வருகின்றனா். நாங்கள்தான் மாற்றத்துக்கான சக்தி; தமிழ்நாட்டுக்கு ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் எந்த மாற்றமும் வராது என்றாா் சீமான்.