திருச்சி

சிங்கப்பூரில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் திருச்சி வந்தவா் கைது

தினமணி செய்திச் சேவை

சிங்கப்பூரில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் திருச்சி வந்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு திருவோணம் பகுதியைச் சோ்ந்தவா் சு.சத்தியமூா்த்தி (44). இவா், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்துள்ளாா். விமான நிலையத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் போலி ஆவணங்கள் மூலம் திருச்சிக்கு வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் பன்னாட்டு விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரி பிச்சை முத்து கண்ணன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சத்தியமூா்த்தியை கைது செய்தனா். விசாரணைக்குப் பின் அவரை பிணையில் விடுவித்தனா்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி கிலோவுக்கு ரூ. 4000 குறைவு!

குரு பலம் பெற ஆலங்குடி செல்லுங்கள்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

SCROLL FOR NEXT