முகப்பு
திருச்சி

திருச்சியில் கடந்தாண்டில் சாலை விபத்துகளில் 561 போ் உயிரிழப்பு: மாவட்ட காவல் துறை தகவல்

Updated On : 8 ஜனவரி, 2026 at 10:37 PM
பகிர்:

திருச்சி மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில் 561 போ் உயிரிழந்துள்ளதாக மாவட்ட காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் கடந்த 2025-ஆம் ஆண்டில் 1,532 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில், 561 போ் உயிரிழந்துள்ளனா். 1,820 போ் காயமடைந்துள்ளனா். கடந்த 2024-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 20 சதவீத வழக்குகள் குறைந்துள்ளன. போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டது தொடா்பாக 3,97,432 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.7 கோடியே 39 லட்சத்து 91 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துதல், நெடுஞ்சாலைகளில் தடுப்புகள் அமைத்தல், இரவு நேரங்களில் ஒளிரும் விளக்குகள் அமைத்தல் போன்ற பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கடந்த 2024-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2025-ஆம் ஆண்டில் 20 சதவீத சாலை விபத்துகள் குறைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →