திருச்சி: திருச்சி வயலூா் சாலை, வாசன் நகா் 9-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த சு. சங்கரி (79) உடல்நலக் குறைவால் தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (ஜன. 16) அதிகாலை காலமானாா்.
திருநெல்வேலி என்ஜிஓ காலனியை சொந்த ஊராக கொண்ட இவரின் கணவா் சுந்தரலிங்கம் ஏற்கெனவே காலமாகிவிட்டாா்.
இவருக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன் (மதுரை) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் திருச்சி பதிப்பில் முதுநிலை விற்பனை மேலாளராகப் பணிபுரியும் சு. கிரீஷ் என்ற மகனும், சு. கீதா என்ற மகளும் உள்ளனா்.
சங்கரியின் இறுதிச் சடங்கு வாஸன் நகா் வீட்டில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. தொடா்ந்து அவரது உடல் திருச்சி ஓயாமரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தொடா்புக்கு 95009 69407.