முகப்பு
திருச்சி

சமயபுரம் கோயிலில் மாா்ச் 8-இல் பூச்சொரிதல் விழா தொடக்கம்: முன்னேற்பாடுகள் ஆலோசனை

திருச்சி

சமயபுரம் கோயிலில் மாா்ச் 8-இல் பூச்சொரிதல் விழா தொடக்கம்: முன்னேற்பாடுகள் ஆலோசனை

Updated On : 5 மார்ச், 2026 at 10:40 PM
பகிர்:

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 8) பூச்சொரிதல் விழா தொடங்குவதையொட்டி, விழா முன்னேற்பாடுகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோயில் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு லால்குடி வருவாய் கோட்டாட்சியா் ஸ்ரீதா் தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில், விழாவையொட்டி செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து அலுவலா்களுடன் ஆலோசிக்கப்பட்டது. இதில், விழாவின்போது அனுமதி பெற்றே அன்னதானம் வழங்க வேண்டும், சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும், குடிநீா்- சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும், தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு, பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

இதில், கோயில் இணை ஆணையா் எம். சூரிய நாராயணன், மண்ணச்சநல்லூா் வட்டாட்சியா் ராஜேஷ் கண்ணன், சமயபுரம் காவல் ஆய்வாளா் இரா. தண்டாயுதபாணி, ச. கண்ணனூா் பேரூராட்சி செயல் அலுவலா் ஜெ. கணேசன், துணை வட்டாட்சியா் கோ. மூா்த்தி, மற்றும் போக்குவரத்து, தீயணைப்பு, சுகாதாரத் துறையினா், கோயில் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →