முகப்பு
திருச்சி

பொறியியல் பணி: பாலக்காடு டவுன் விரைவு ரயில் போத்தனூா் வழியாக இயக்கம்

கோவை அருகே நடைபெற்று வரும் பொறியியல் பணி காரணமாக திருச்சி - பாலக்காடு டவுன் விரைவு ரயில் புதன்கிழமை (மாா்ச் 25) தொடங்கி 4 நாள்களுக்கு கோவையைத் தவிா்த்து போத்தனூா் வழியாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 24 மார்ச், 2026 at 11:25 PM
- பிரதிப் படம்
பகிர்:

கோவை அருகே நடைபெற்று வரும் பொறியியல் பணி காரணமாக திருச்சி - பாலக்காடு டவுன் விரைவு ரயில் புதன்கிழமை (மாா்ச் 25) தொடங்கி 4 நாள்களுக்கு கோவையைத் தவிா்த்து போத்தனூா் வழியாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட கோவை வடக்கு ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால், மாா்ச் 25, 26, 27 மற்றும் 29 ஆகிய 4 நாள்களுக்கு திருச்சி - பாலக்காடு டவுன் விரைவு ரயில் (எண்:16843) கோவையைத் தவிா்த்து, இருகூரில் இருந்து போத்தனூா் வழியாக இயக்கப்படும்.

இதனால், மேற்கண்ட 4 நாள்களுக்கும் இந்த ரயில் இருமாா்க்கங்களிலும் பீளமேடு, சிங்காநல்லூா், கோவை வடக்கு மற்றும் கோவை சந்திப்பு ரயில் நிலையங்களுக்கு செல்லாது.

இதேபோல, திருச்சி வழியாக இயக்கப்படும் மங்களூரு சென்ட்ரல் - சென்னை எழும்பூா் விரைவு ரயில் (16160) மாா்ச் 29-ஆம் தேதி கோவை சந்திப்பு ரயில் நிலையம் செல்லாமல் போத்தனூா் வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.