காற்றுடன் மழை: மதுரைக்கு திருப்பிவிடப்பட்ட விமானம்
காற்று, மழையால் திருச்சியில் சனிக்கிழமை மாலை தரையிறங்க வேண்டிய தனியாா் விமானம் மதுரைக்கு திருப்பி விடப்பட்டது.
ஹைதராபாத்தில் இருந்து 149 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ விமானம் திருச்சியில் சனிக்கிழமை மாலை 5 மணிக்குத் தரையிறங்க வேண்டும். ஆனால், திருச்சியில் வீசிய காற்று, மழையால், மோசமான வானிலை நிலவியது. எனவே இந்த விமானம் மதுரைக்கு திருப்பிவிடப்பட்டது.
அதேவேளை, மதுரையிலும் பலத்த மழை பெய்த நிலையில், அங்கு 149 பயணிகளுடன் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. இதேபோல திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு மாலை 6.45 மணிக்கு புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம் 2 மணி நேரம் தாமதமாக இரவு 8.55 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
Advertisement