அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய 2 போ் கைது
புத்தாநத்தம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் அரசு அனுமதியின்றி மண் எடுக்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் புதன்கிழமை தணிக்கையில் ஈடுபட்டனா்.
புத்தாநத்தத்தை அடுத்த வடக்கிபட்டி முனியப்பன் கோயில் காடருகே உள்ள ஆரியம்பட்டியைச் சோ்ந்த ராசு என்பவருக்கு சொந்தமான நிலத்திலிருந்து அனுமதியின்றி சுமாா் அரை யூனிட் கிராவல் மண் அள்ளிக் கொண்டிருந்த பொன்னுசங்கம்பட்டி ராசு மகன் செந்தில்குமாா்(45) மற்றும் வடக்கிப்பட்டியை சோ்ந்த சின்னகாளை மகன் சண்முகம் (48) ஆகிய இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனா். மேலும், மண் எடுக்க பயன்படுத்திய டிராக்டருடன் கூடிய டிப்பா், அரை யூனிட் கிராவல் மண் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த புத்தாநத்தம் போலீஸாா், கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தினா்.
Advertisement