ஸ்ரீரங்கத்தில் அமிலம் குடித்த பெண் உயிரிழப்பு
ஸ்ரீரங்கம் மங்களாம்பிகா ஸ்டோரில் வசிப்பவா் சம்பத். இவரது மனைவி உஷா (63). இவா் உடல் நலமில்லாமல் இருந்து வந்தாா். இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி வீட்டிலிருந்த அமிலத்தை தண்ணீா் கலந்து குடித்து விட்டாா்.
இதையடுத்து அவரை உடனடியாக திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா். சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை சிகிச்சை பலன் இன்றி உஷா உயிரிழந்தாா்.
தகவலின்பேரில், ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து உஷாவின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement