ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த 2 பேர் கைது
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே ஏடிஎம் மைய இயந்திரத்தை உடைத்த இரண்டு பேரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே ஏடிஎம் மைய இயந்திரத்தை உடைத்த இரண்டு பேரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள வாரியங்காவலில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இவ்வங்கிக்கு அருகில் ஏடிஎம் மைய இயந்திரம் உள்ளது.
இங்கு சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இரண்டு பேர் மது அருந்திவிட்டு பணம் எடுக்க வந்தனர்.
Advertisement
Advertisement
அப்போது, இயந்திரத்தில் பணம் வராததால், ஏடிஎம் மைய இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து வங்கிக் கிளை மேலாளர் ஜேக்கப் சகாரியார் (57) ஜயங்கொண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் ரபீக்ஹுசேன் ஆகியோர் வழக்குப் பதிந்து, இதுதொடர்பாக கண்டியங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (37), செங்குந்தபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் (35)
ஆகியோரைக் கைது செய்தனர்.