அரியலூர்

நாளை அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு

DIN

அரியலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கற்கும் பாரதம் திட்டத்தில் சேர்ந்து, அடிப்படை கல்வியறிவு பயின்ற 15 வயதுக்கு மேல் 80 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 20) அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க. லட்சமிபிரியா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளது: இத்தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் 692 பேர் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வு 6 ஒன்றியங்களில் உள்ள 65 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
இத்தேர்வை கற்கும் பாரத மையத்தில் படித்தவர்களும், மையத்தில் படிக்காத மற்ற கல்லாதவர்களும் எழுதலாம். மேலும், கடந்தமுறை நடந்து முடிந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களும் இத்தேர்வில் பங்கேற்று பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT