அரியலூர்

ஜயங்கொண்டத்தில் அதிமுகவினர் அஞ்சலி

DIN

ஜயங்கொண்டம் எம்எல்ஏ ஜெ.கே.என். ராமஜெயலிங்கம் தலைமையில் மாவட்டத் துணைச் செயலர் தங்கபிச்சைமுத்து, இலக்கிய அணி மாவட்டச் செயலர் அறிவு என்கிற   சிவசுப்பிரமணியன், நகரச் செயலர் பி.ஆர். செல்வராஜ், ஒன்றியச் செயலர் கல்யாணசுந்தரம், ஜெ.வி. தண்டபாணி, ப. தவசீலன், ஜகன்ராஜ், மனோகரன், அண்ணாதுரை, வழக்குரைஞர் கலைமணி உள்ளிட்ட அதிமுகவினர் ஜயங்கொண்டம் கடைவீதியில் இருந்து ஊர்வலமாக சென்று ஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு முன் எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகே வைத்திருந்த ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 
உடையார்பாளையம் பேருந்து நிலையம் அருகே நகரச் செயலர் பெருமாள், மாவட்ட மருத்துவர் அணி செயலர் மருத்துவர் கே. ஜெயராமன் ஆகியோர் உள்ளிட்டோர் ஜெயலலிதா படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர். ஆண்டிமடத்தில் ஒன்றியச் செயலர் மருதமுத்து, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலர் ரீடு செல்வம், எம்ஜிஆர் மன்ற ஒன்றியச் செயலர் பாலு, ஆகியோர் ஊர்வலமாகச் சென்று   மாலை அணிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

SCROLL FOR NEXT