அரியலூர்

அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பணத்தாள் மதிப்பு நீக்கத்தால் வேலையிழந்தவர்களுக்கு உரிய நிவராணம் வழங்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் துரைசாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மணியன்,செயலர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய தொழிற்சங்க மைய மாவட்டத் தலைவர் சிற்றம்பலம்,மாவட்ட துணைச் செயலர் பிச்சைப்பிள்ளை ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

தனி பட்டா வழங்க லஞ்சம்: நில அளவையா் கைது

காவலரைத் தாக்கிய இளைஞா் கைது

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது மூதாட்டி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

ஆயுதங்களுடன் சுற்றிய நால்வா் கைது

SCROLL FOR NEXT